மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது !

kaithu

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முற்றுகையிட்ட காவற்துறையினர் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணனி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது கனணிபயிற்சி நெறிக்கான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் ஆவணத்தயாரிப்பதற்கான மடிகனணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.