யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

185855 corona 1 1
185855 corona 1 1

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது.