முகக் கவசம் அணியாதோர் கம்பி எண்ணுவர்சிவில் உடையில் களமிறங்கினர் :காவற்துறையினர்!

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அடங்க மறுத்து வருகின்ற நிலையில், பொதுமக்கள் உரிய முறையில் சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்டறிய நாடு பூராகவும் காவற்துறையினர் சிவில் உடையில் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றிலிருந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக் கவசம் அணிதல் உட்பட சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.