வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நலிவுற்ற மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.எம்.எம்.காசிம், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அரிசியா உம்மா, வாழைச்சேனை வேள்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான கே.பிரியா, என்.ஜேசுதாஸ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை வேள்ட் விஷன் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நலிவுற்ற மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தூர பிரதேசங்களுக்கு சென்று கல்வி கற்பதற்கு போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வந்த பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.