கிங் கங்கையில் நீராடச்சென்று பாறைகளில் சிக்குண்ட 13 பேர் மீட்பு

river 1 1
river 1 1

வில்கமுவ – கிங்  கங்கையில் நீராடச் சென்றிருந்தபோது, நீரின் அளவு அதிகரித்ததால், பாறைகளில் சிக்கியிருந்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4.30 அளவில், குறித்த 13 பேரும், ஹிங் கங்கையில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போது, கங்கையில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால், அவர்கள் பாறைகளில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த, காவல்துறை உயிர் பாதுகாப்பு பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இரவு 11.30 அளவில் அவர்களை மீட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டானை, மாளிகாவத்தை மற்றும் மஹியங்கனை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.