ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

images 1 3
images 1 3

உள்ளக கருத்து முரண்பாடுகள் காரணமாக, தற்போது நீதிமன்ற நடவடிக்கையில் உள்ள, 6 அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழுவின் தவிசாளர், சிரேஷ்ட சட்டத்தரணி, நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சிகளின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, பலர் முன்னிலையாகியுள்ளதன் காரணமாக முரண்பாட்டு நிலை ஏற்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும் வரையில், குறித்த கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.