நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 237 பேரில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வந்த 78 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 23 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 21 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில், 20 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 18 பேருக்கும், பொலனறுவை மாவட்டத்தில் 13 பேருக்கும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தலா 9 பேருக்கும் தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 96,186 ஆக உயர்வடைந்துள்ளது.