சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

kaithu

காவல்துறையினரால் நேற்று (18) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஹொரவ்பதான, கலாவன, மீரிகம, தின்னியாவல மற்றும் கலஹ போன்ற பிரதேசங்களில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.