காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

IMG 20210419 WA0006
IMG 20210419 WA0006

வவுனியா செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் காட்டு யானைதாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்றையதினம் மாலை காப்பாச்சி பகுதியில் உள்ள வயல்காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றுள்ளார். இன்றையதினம் வீடுதிரும்பாத நிலையில் வயற்பகுதிக்கு சென்ற சிலர் அவர் சடலமாக இருப்பதனை அவதானித்துள்ளதுடன், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தில் சின்னசிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நலீம் வயது 43என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்,

குறித்த நபர் காட்டுயானை தாக்கியமையால் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்