யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1 1
vikatan 2020 07 d3a14203 c091 4c01 9aef 5310fb812abb fusion medical animation rnr8D3FNUNY unsplash 1 1

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாண காவல் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.