கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

murder knife crime stab generic 360
murder knife crime stab generic 360

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மோதலில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்