குளவி கொட்டுக்கு இலக்காகி 20 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!

wasp
wasp

கொத்மலையில், குளவி கொட்டுக்கு இலக்காகி, 20 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை, வெதமுல்ல – லிலிஸ்லேன்ட் தோட்டத்தில், இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 16 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், நான்கு பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.