போதைப்பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக நவீன தொழில்நுட்பத்திலான ஒரு தொகை உபகரணங்கள் (Breathalyzer) இலங்கை காவல்துறையினருக்கு வழங்கப்பட இருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதையில் வாகனங்களை செலுத்திய சுமார் ஒரு இலட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.