உலக பூமி தினம் ஆகிய இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயிரன் தலைமையில் பனைமரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை அழகு படுத்துவதற்கென 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாண நகரின் வரவேற்பு வளைவு அமைந்துள்ள இடத்திலிருந்து செம்மணி வீதியில் உள்ள பனை மரங்களை செதுக்கி வடிவமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது குறித்த நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.