குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பு!

AP20103227174630
AP20103227174630

குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.