பசறை 13ஆம் கட்டை பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுதலை!

bail 1 1
bail 1 1

14 பேரின் மரணத்திற்கு காரணமான பதுளை – பசறை 13ஆம் கட்டை பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசறை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி, பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், 14 பேர் மரணித்ததுடன் 32 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.