அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில், பதில் அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்படுவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்து, அவர்களுக்கான நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.