பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் பெருந்தோட்டத் தொழிற்சங்கம் ஒன்று தோட்டத் தொழிலாளர்களை மேலதிகமாக 2 கிலோகிராம் தேயிலை பறிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கம் சில தோட்டத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகள் தோட்ட மக்களை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு எனவும் அதனை எதிர்ப்பதற்கு அனைத்து பெருந்தோட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.