கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 4
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 4

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 672 பேரில் 192 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – பாதுக்க பகுதியில் 36 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 117 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 99 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 64 பேர், புத்தளம் மாவட்டத்தில் 39 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 15 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.