கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்!

Protest
Protest

நுவரெலியா, இராகலை, மாகுடுகல – கிளன்டவன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில், இராகலை – சூரியகாந்தி சந்தியில் முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள், தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியதுடன், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பையும் வெளியிட்டனர்.