புத்தபெருமானின் இலங்கைக்கான இரண்டாவது பயணத்தை நினைவுகூறும் பக் முழு நோன்மதி தினம் இன்றாகும்.
இரத்தின கதிரையொன்றை அடிப்படையாகக் கொண்டு சூளோதர மற்றும் மகோதர நாக அரசர்களுக்கு இடையில் இடம்பெறவிருந்த சண்டையைத் தவிர்ப்பதற்காக புத்தபெருமான் பரிநிர்வாணம் அடைந்து ஐந்து ஆண்டுகளில் நாகதீபத்திற்கு வந்தார்.
மணியக்கித்த நாக மன்னன் தனது ராஜ்ஜியமான களனிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததும் இந்த பயணத்தின்போதாகும். பக் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள விகாரைகளில் பல்வேறு பிங்கம நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.