மோசடியில் ஈடுபடுபவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன

public to the notice
public to the notice

தனது பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான நபர்கள் குறித்த தகல்கள் இருக்குமாயின் அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.