கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

coronabusiness 1588833381344 2
coronabusiness 1588833381344 2

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1111 பேரில் 200 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 103,487 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 198 பேர், குருநாகல் மாவட்டத்தில் 119 பேர், காலி மாவட்டத்தில் 86 பேர், கண்டி மாவட்டத்தில் 74 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 70 பேர் ,நுவரெலியா மாவட்டத்தில் 55 பேர் , பொலன்னறுவை மாவட்டத்தில் 41 , மாத்தறை மாவட்டத்தில் 38 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 37 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 32 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 28 பேர் , பதுளை மாவட்டத்தில் 20 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 15 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .