ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வெள்ளை வேன் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் நடத்திய ஊடக மாநாட்டு நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது விசாரணைகளில் தெரியவரும். அத்துடன் அந்த நாடகத்தின் நடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? அந்த நாசக்கார குண்டர்கள் யார்? என்பது விரைவில் பொது மக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.