போலி தகவலை பரப்பிய ஒருவர் கைது

kaithu

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை காஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.