வெல்லவாயவில் அண்மையல் காணாமல்போனதாக கூறப்படும் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தொழிலதிபரின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிக் காவல்துறைமா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி இறத்தோட்டை பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல்போனதாக கூறப்படும் தொழிலதிபர் உடையதா என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. சோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இறந்தவருக்குச் சொந்தமான அலுவலக கட்டிடத்தில் சி.சி.டி.வி காட்சிகள் குறித்து விசாரித்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரு சந்தேக நபர்களும் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் ஆவர்.