26 கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

1599445111 aresst lot 2 1
1599445111 aresst lot 2 1

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையிலிருந்து 26 கிலோ தங்கத்துடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 31.7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, விமான நிலைய ஊழியர் ஒருவரும், பயணியொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த நீண்டகால விசாரணையின் பயனாக விமான நிலைய ஊழியர்களை ஈடுபடுத்தி நாட்டினுள் தங்கக் கடத்தலை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்விளைவாக, இன்று கத்தார் தோஹா விமான நிலையத்திலிருந்து பயணி ஒருவரால் விமான நிலைய கழிப்பறையில் வைத்து, விமான நிலைய பராமரிப்பு ஊழியர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரான விமான நிலைய பணியாளர் தனது உடலில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியேறத் தயாரான போது, சுங்கத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தங்கப் பொருட்களில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளும் அடங்குவதுடன், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.