நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,662 பேரில், அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் 329 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 317 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 193 பேருக்கும், காலி மாவட்டத்தில் 114 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 101 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 100 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 93 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 54 பேருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 43 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 41 பேருக்கும், மொனராகலை மாவட்டத்தில் 36 பேருக்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 32 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 31 பேருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 30 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 21 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 15 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 11 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது