நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது என வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அவ்வாறு, போலிச் செய்திகளைப் பரப்புவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.