கொழும்பு உட்பட 4 மாவட்டங்களின் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

WhatsApp Image 2020 12 17 at 11.30.56 1
WhatsApp Image 2020 12 17 at 11.30.56 1

நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை காவல்துறை அதிகார பிரவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவின், அன்புவெளிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை காவல்துறை அதிகார பிரிவின், நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.