பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்த இரண்டு யானைகள்

IMG 20210503 WA0015
IMG 20210503 WA0015

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மலைக் கிராமத்தில் யானைகள் இரண்டு பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் வீழ்ந்துள்ள நிலையில் வெளியில் வரமுடியாது தவிக்கின்றது

செம்மலையின் புளியமுனைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு (துரவு) ஒன்றிலேயே குறித்த யானைகள் விழுந்து சகதிக்குள் சிக்கியிருக்கின்றன

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்