கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நாளை(5) இடம்பெறவிருந்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்கபெறாமையினால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.