யாழில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை!

IMG 20210504 WA0033
IMG 20210504 WA0033

எதிர்வரும் நாட்களில் பேருந்துகளில் ஆசன அளவிற்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர் பேருந்துகளில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

இன்று யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலைய சாரதி நடத்துனர்களுடன் உரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியின். தலைமையில் யாழ்ப்பாண பிரதேச செயலர் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி, மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.