குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

images 1 1
images 1 1

யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த சயந்தன் பரமநாதன் அவர்களின் நிதியுதவியின் கீழ் ஒரு பகுதி கற்றல் உபகரணங்கள் நேற்று (05) யாழ் வேலணையை சேர்ந்த தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தாய் தந்தை இல்லாத குறித்த மாணவியையும், மாணவியின் அக்காவினையும் தனித்து நின்று வளர்க்கும் அவர்களது அம்மம்மாவிற்கு நிவாரண பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வேலணை பகுதியில் ஆங்கில ஆசிரியராக பணி புரியும் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் தகவலுக்கமைய இந்த உதவி செய்யப்பட்டுள்ளாதாக பீட் தி பூர் உணவளிப்போம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.