நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,939 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிலியந்தலையில் 122 பேருக்கும், முல்லேரியாவில் 55 பேருக்கும், பாதுக்கையில் 51 பேருக்கும், கெஸ்பேவயில் 26 பேருக்கும், வெல்லம்பிட்டியில் 33 பேருக்கும், பத்தரமுல்லையில் 21 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன், கல்கிஸையில் 15 பேருக்கும், பொரளையில் 12 பேருக்கும், வெள்ளவத்தையில் 10 பேருக்கும் என கொழும்பு மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் பலருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.