யாழில் சிறீ சபாரத்தினத்தின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

IMG 20210506 WA0040
IMG 20210506 WA0040

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 35 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் சிறீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,  உள்ளூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.