யாழ். சங்கானையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

download 1 14
download 1 14

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணம் – சங்கானை நகர்ப் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட நபர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, இனிமேல் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

சங்கானை வைத்திய அதிகாரி பணிமனையின் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி, வலிகாமம் மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மானிப்பாய் காவல் நிலைய உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.