வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மீது காவல்துறையினர் திடீர் சோதனை

IMG20210501110122 01
IMG20210501110122 01

வவுனியா நகர வீதி கடைகள் மற்றும் மரக்கறிகள், பழங்கள் விற்பனை நிலையங்கள் மீது காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முககவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாட்டில் கொவிட் 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியாவிலும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் வீதியோரங்களில் வியாபாரம் செய்வோர், வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிகையும் காவல்துறையினரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.