பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்து

1 85
1 85

காலி – கொழும்பு பிரதான வீதி 84ஆம் கட்டை பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்தக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்தியின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கு காரணம் என காவல்துறை தெரிவிக்கின்றது.

இதனால் பாரவூர்தி வீதியோரம் இருந்த பாதுகாப்பு சுவர் ஒன்றுடன் மோதுண்டு குடைசாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எந்தவொரு நபரும் காயமடையவில்லை என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.