எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒருமித்து,ஒற்றுமையாக எதிர்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிளவுபடாமல் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி, ஒன்றாக கூடி எதிர்வரும் தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தொடர்ந்தும் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவை அறிவிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதுக்கும், ஏனைய கருமங்களை கையாளுவதற்கும் தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக அவர்களுக்காக நீண்டகாலமாக செயற்படக்கூடிய கட்சியின் பின்னால் நிற்க வேண்டியது அவசியம் என தமது உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் அதன் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.