எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பகுதியில் மக்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணி அடைந்த பின்னடைவிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை கட்சியின் தலைவர் பதவி இல்லாமல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாராக களமிறங்க போவதில்லைஎன தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர் பதவியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நான் இருந்ததாகவும் கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளிற்கமையவே நிபந்தனையின்றி போட்டியிட்டதாக தெரிவித்தார்.
கட்சியை பிளவுபடுத்துவது எனது நோக்கம் அல்ல எனவும் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு எனவும் அதற்காக என்னை ஓய்வு பெறச் சொன்னாலும் அதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.