பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட முற்றுகை நடவடிக்கை

dept.excise 1
dept.excise 1

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்களை தடுப்பதற்காக கலால் திணைக்களம் விசேட முற்றுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது,

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றச் செயல்களை தடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கமைவாக நாடு முழுவதிலும் எத்தகைய இடங்களிலும் இடம்பெறும் இது தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விசேட முற்றுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.