வைத்தியர் சாஃபிக்கு எதிராக மீளவும் விசாரணை!

1 ewe
1 ewe

வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீளவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குருணாகல் நீதவான் வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சந்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் வைத்தியசாலையின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த குழுவிற்கான முக்கிய பணியாகும்.