கிளிநொச்சியில் உயிரிழந்த 15 வயதுச் சிறுமிக்கு கொரோனா!

corona deth
corona deth

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கொரோனாப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரவு உயிரிழந்துள்ளார்.அவருடைய பிசிஆர் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த சிறுமிக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடைய சடலம் சுகாதார நடைமுறைப்படி நாளை வவுனியாவில் தகனம் செய்யப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.