வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் உற்சவத்தின் பொங்கல் வைபவம் ஆரம்பம்!

DSC02538
DSC02538

முல்லைத்தீவு மாவட்டத்தின்  வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு நேற்று 24.05.21 அனுமதிக்கப்பட்ட 51 நபர்களுடன் காவற்துறையினர்,இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்   வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

DSC02465

கடந்த 17.05.21 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழுநாட்கள் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் அணையா விளக்காக எரிந்த தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் வற்றாப்ளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு நேற்று அதிகாலை (24.05.21) எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பூசைகள் நடைபெற்றுவருகின்றன

DSC02542

அந்தவகையில் ஆலயத்தில் நேற்று இரவு பத்து மணியளவில் மடப்பண்டம் எடுத்து வந்து நேர்ந்து பொங்கல் உற்சவம் இடம்பெற்றுவருகிறது 

DSC02606