சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி!

c7740e6b cabinet decisions 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
c7740e6b cabinet decisions 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்பட உள்ளது. அத்தோடு தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நாளாந்தம் 45 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்க கூடியவாறு புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்விரு செயற்திட்டங்களுக்கும் 600 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது அமைதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.