குளக்கட்டு வீதியை பயன்படுத்தி அநாவசியமாக நகருக்கு வரும் மக்கள்

IMG 2766
IMG 2766

வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

IMG 2764

இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம்,பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகைதருகின்றனர்.

நகரில் வியாபாரநிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையற்றவகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.

நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியில் காவற்துறை சோதனைச்சாவடி ஒன்று செயற்ப்பட்டு வருவருவது போல குளக்கட்டுப்பகுதியிலும் காவற்துறையினரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்