படகு விபத்து ; மீனவர் ஒருவர் மாயம்

dead1 1
dead1 1

மிரிஸ்ஸ கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த மேலும் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி கடலுக்கு சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு படகின் உதவியுடன் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வெலிகம – பெலேன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.