அனைத்து தபால் நிலையங்களும் இன்று முதல் திறப்பு

sri lanka post office logo 620x330 copy copy
sri lanka post office logo 620x330 copy copy

இன்று (03) முதல் நாட்டிலுள்ள அனைத்து பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன

2021 யூன் மாதத்திற்கான பொதுசன உதவிக் கொடுப்பனவு, மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்காக இன்று தொடக்கம் நாட்டின் பிரதான மற்றும் அஞ்சல் நிலையங்களை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு வருகை தரும் சேவை பெறுநர்கள் குறித்த கொடுப்பனவு அட்டைகள் அல்லது முதியோர் அட்டையை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு காண்பித்து அஞ்சல் அலுவலகங்களுக்கு வருகை தர முடியும்.