மன்னாரில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

3 16 2
3 16 2


மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய பிரிவு மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று (3) திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

பயணத் தடை நாட்களில் வெளியில் உலாவித் திரிந்த மற்றும் அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் ,விவசாயிகள் என்று 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பேருந்து நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையில் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் நானாட்டான், பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஆர். கே. றொஜன், மற்றும் காவல்துறையினரும் இணைந்து செயற்பட்டனர்.